மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது


மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
x

லாஸ்பேட்டையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்ட உடன் அங்கு இருந்தவர்கள் தப்பி ஓட முயற்சி செய்தனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை செயின்ட்பால்பேட் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 25), குறிஞ்சி நகரை சேர்ந்த விக்னேஷ் (22) என்பதும், அவர்கள் சட்டை ப்பையில் சிறு சிறு பொட்டலங்களாக 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் அந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


Next Story