மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது


மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
x

காரைக்காலில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதமாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, கஞ்சா கும்பலை கைது செய்து வருகிறனர். இந்த நிலையில், காரைக்கால் சமத்துவபுரம் பகுதியில், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காரைக்கால் நகர போலீசார் அங்கு சென்று, கஞ்சா விற்ற 2 வாலிபர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் காரைக்கால் தருமபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது ரிபாயித் (வயது 19), காரைக்கால் முகமது ஆசிக்கின் (21) என்பதும், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story