பொதுமக்கள் திடீர் போராட்டம்


பொதுமக்கள் திடீர் போராட்டம்
x

ஏம்பலம் பகுதியில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வில்லியனூர்

ஏம்பலம் பகுதியில் உள்ள பாலமுருகன் நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகாலம் முன்பு அமைக்கப்பட்ட இந்த நகரில் தார் சாலை வசதி இல்லாமல் குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து அரசுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில் அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட நகருக்கு சாலை வசதி செய்யப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் நகர் பகுதி பொதுமக்கள், இன்று காலை 7 மணி அளவில் ஏம்பலம் நான்குரோடு சந்திப்பில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மங்கலம் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர்அதிகாரிகளிடம் பொதுமக்களின் கோரிக்கை குறித்து தெரிவிக்கப்டும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story