காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை


காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
x

புதுச்சேரி

புதுச்சேரி லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம் தவமணி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. அவரது மனைவி சுபா (வயது 20). இவர்கள் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் பாலாஜி அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபித்து கொண்டு சுபா குழந்தையுடன் மகாவீர் நகரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இருப்பினும் மனவேதனையில் இருந்த அவர் அங்குள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1½ ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் தாசில்தார் விசாரணையும் நடைபெற்று வருகிறது.


Next Story