அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x

புதுச்சோியில் அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் மூலம் இயங்கிவரும் அங்கன்வாடியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் 29 ஊழியர்கள் மற்றும் 23 உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை புதுவை பூர்வீக ஆதிதிராவிடர் அரசு அலுவலர்கள் நலக்கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி புதுவை சட்டசபை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணாவுக்கு கூட்டமைப்பின் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். தர்ணாவில் அங்கன்வாடி ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


Next Story