வாலிபர் மீது தாக்குதல்
மூலக்குளம்
விழுப்புரம் மாவட்டம் திருமங்கலம் புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32). புதுச்சேரி சாரத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர், வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பினார். கும்பாபேட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றார். அப்போது அங்கு முத்திரையர்பாளையத்தை சேர்ந்த ரவுடி புளியங்கொட்டை என்ற ரங்கராஜன் மற்றும் அவரது கூட்டாளி வழியை மறித்து நின்றதாக கூறப்படுகிறது. அவர்களிடம் வழிவிடுமாறு கார்த்திகேயன் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து கார்த்திகேயனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story