மீனவர் மீது தாக்குதல்


மீனவர் மீது தாக்குதல்
x

புதுச்சேரி

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதி என்கிற மதியழகன் (வயது 26). மீனவர். இவர் சம்பவத்தன்று இரவு கடற்கரைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார். முத்துமாரியம்மன் கோவில் அருகே வந்தபோது அதே பகுதியை சேர்ந்த செல்வமுருகன், அருள் ஆகியோர் தகராறு செய்துகொண்டு இருந்தனர். இதனை பார்த்த மதியழகன் அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த செல்வமுருகன், கீழே கிடந்த கல்லை எடுத்து மதியழகனை தாக்கியதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த செல்வமுருகனின் மனைவி அஞ்சலாட்சி மற்றும் மகன்களும் மதியழகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story