விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்


விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
x

பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது

புதுச்சேரி

பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவதற்காக புதுவை அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பேரிடர் கால நண்பன் பயிற்சி கடந்த 11-ந்தேதி முதல் தொடங்கப்பட்டு நடந்தது. காமராஜர் மணிமண்டபத்தில் நடந்து வரும் இப் பயிற்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் பயிற்சி பெற்றனர்.

இதன் ஒரு பகுதியாக பேரிடர் மேலாண்மைத்துறையில் தன்னார்வ தொண்டினை ஊக்கப்படுத்தும் வகையில் தன்னார்வலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நேற்று நடந்தது. இந்த ஊர்வலத்தை துணை கலெக்டரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனருமான தமிழ்ச்செல்வன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். காமராஜர் மணிமண்டபத்திலிருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் காமராஜர் மணிமண்டபத்தை அடைந்தது.


Next Story