ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி


ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி
x

வில்லியனூர் தட்டாஞ்சாவடியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி

வில்லியனூர் தொகுதி தட்டாஞ்சாவடி மற்றும் அதனை சார்ந்த பகுதியில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த தட்டாஞ்சாவடி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் நீர்மூழ்கி மோட்டார் மற்றும் அதனை சார்ந்த பணிகள் பொதுப்பணித்துறையின் பொது சுகாதார கோட்டத்தின் மூலம் ரூ.14 லட்சத்து 12 ஆயிரம் செலவில் அமைக்கப்பட உள்ளது.

இந்த பணிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான சிவா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், பொதுசுகாதார கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story