தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை


தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை
x

காரைக்காலில் செல்போன் பார்ப்பதை கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த நிரவி மேலஓடுதுறையை சேர்ந்தவர் செந்தில். அவரது மனைவி கீதாலட்சுமி. இவர்களது மூத்த மகள் நர்மதா (வயது19). இவர் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் இறுதியாண்டு படித்தார். இவர் வீட்டில் அதிக நேரம் செல்போனை பார்த்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த நர்மதா நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நர்மதா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story