கல்லூரி மாணவி மாயம்
வில்லியனூர் அருகே கல்லூரி மாணவி மாயமானார்.
வில்லியனூர்
வில்லியனூர் அருகே உள்ள உறுவையாறு, லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (49) டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் புவனேஸ்வரி (18). இவர் பாரதிதாசன் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் அனைவரும் குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு உறங்கியுள்ளனர். மறுநாள் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது புவனேஸ்வரியை காணவில்லை. பதறிப்போன பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மங்கலம் காவல் நிலையத்தில் தந்தை ஆறுமுகம் புகார் அளித்ததின்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்கு பதிந்து மாயமான மாணவியை தேடிவருகிறார்.
Related Tags :
Next Story