புதிதாக 5 பேருக்கு கொரோனா


புதிதாக 5 பேருக்கு கொரோனா
x

புதுவையில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ள நிலையில் 20 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1,237 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 5 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. புதுச்சேரியில் 4 பேரும், ஏனாமில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் குணமடைந்தார். தற்போது புதுச்சேரியில் 10 பேரும், காரைக்காலில் ஒருவரும், ஏனாமில் 9 பேரும் என மொத்தம் 20 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று முதல் தவணை தடுப்பூசியை 64 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 419 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 105 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 99 ஆயிரத்து 770 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


Next Story