மேலும் 5 பேருக்கு கொரோனா


மேலும் 5 பேருக்கு கொரோனா
x

புதுவையில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மெதுவாக உயர்ந்து வருகிறது. இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1,273 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 5 பேருக்கு மட்டும் தொற்று பாதிப்பு உறுதியானது. நேற்று 5 பேர் குணமடைந்தனர். தற்போது 16 பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று முதல் தவணை தடுப்பூசியை 127 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 710 பேரும், 3-வது தவணை தடுப்பூசியை 169 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 17 லட்சத்து 8 ஆயிரத்து 594 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story