விவசாயிக்கு கத்தி வெட்டு


விவசாயிக்கு கத்தி வெட்டு
x

முன்விரோத தகராறில் விவசாயியை கத்தியால் வெட்டிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருபுவனை

திருபுவனை அருகே உள்ள தமிழக பகுதியான மாங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிசேசன் (வயது 37). விவசாயி. இவரது மாமியார் வீடு திருபுவனை அருகே மதகடிப்பட்டு பாளையத்தில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதிசேசன் தனது மாமியார் வீட்டுக்கு வந்தபோது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு (30) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று ஆதிசேசன் தனது மாமியார் வீட்டில் நடந்த கிரகபிரவேச நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது அங்கு வந்த விஷ்ணுவுக்கும், ஆதிசேசனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விஷ்ணு தனது கூட்டாளிகள் மன்னாதன், வாழுமுனி, கண்ணதாசன் ஆகியோருடன் சேர்ந்து ஆதிசேசனை கத்தியால் வெட்டி விட்டு தப்பிச்சென்றார். இதில் காயமடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் குமரவேலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய விஷ்ணு உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story