பெண்ணுக்கு கொலை மிரட்டல்


பெண்ணுக்கு கொலை மிரட்டல்
x

காலாப்பட்டில் வாட்ஸ்-அப் காலில் ஆபாசமாக பேசி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

காலாப்பட்டு

காலாப்பட்டு பிள்ளைச்சாவடியை சேர்ந்தவர் ராமு. புதுவை பல்கலைக்கழகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சாமுண்டீஸ்வரி (வயது 38). இவருக்கும் உறவினரான ரஞ்சித்துக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சாமுண்டீஸ்வரி, ரஞ்சித்திடம் பணம் கேட்டுள்ளார். இதுகுறித்து ரஞ்சித் கோவையில் வசிக்கும் தனது அக்காள் நந்தினியிடம் தெரிவித்தார். இதையடுத்து நந்தினியின் கணவர் அருண்குமார் (37) சாமுண்டீஸ்வரிக்கு வாட்ஸ் அப் காலில் தொடர்பு கொண்டு, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story