குடிபோதையில் ரகளை; 5 பேர் கைது


குடிபோதையில் ரகளை; 5 பேர் கைது
x

குடிபோதையில் ரகளை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ. அருகே வாலிபர் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டார். அந்த வழியாக ரோந்து சென்ற மேட்டுப்பாளையம் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தர்மாபுரியை சேர்ந்த இளவரசன் (வயது 27) என்பது தெரிய வந்தது. அதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் கடற்கரை சாலை அருகே உள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட தேனி மாவட்டம் போடியை சேர்ந்த திருப்பதிவாசகன் (31), பெரியகுளத்தை சேர்ந்த பாண்டிதுரை (28), மாரிராஜ் (28) ஆகியோரை பெரியகடை போலீசார் கைது செய்தனர்.

மேலும் மடுகரை நெற்களம் பகுதியில் ரகளையில் ஈடுட்ட தாமோதரன் (43) என்பவரை மடுகரை போலீசார் கைது செய்தனர்.


Next Story