பெண் தற்கொலை


பெண் தற்கொலை
x

புதுவை நெட்டப்பாக்கம் அருகே கணவருடன் ஏற்பட்ட தயராறின் காரணமாக எலி மருந்தை தின்ற பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தால், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நெட்டப்பாக்கம்

நெட்டப்பாக்கம் அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது மகள் நதியா (வயது 30). இவருக்கும் கல்மண்டபம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்டத நதியா கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்த எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை கணவர் சதீஷ் மற்றும் பெற்றோர் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நதியாவின் சாவு குறித்து தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story