காசநோயாளிகளுக்கு உணவு பெட்டகம்


காசநோயாளிகளுக்கு உணவு பெட்டகம்
x

காரைக்கால் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் காசநோயாளிகளுக்கு உணவு பெட்டகத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி

காசநோயாளிகள் விரைவாக குணமடையும் வகையில் அவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய உணவு பெட்டகத்தை பல்வேறு தரப்பினரும் வழங்கி வருகிறார்கள். இதன்படி காரைக்கால் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் மாதாந்திர உணவு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு செல்வகணபதி எம்.பி. தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு 500 பேருக்கு உணவு பெட்டகங்களை வழங்கினார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய். சரவணன்குமார், சுகாதாரத்துறை செயலாளர் முத்தம்மா, இயக்குனர் ஸ்ரீராமுலு, காசநோய் ஒருங்கிணைப்பு அதிகாரி சந்திரசேகர், உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


Next Story