மருத்துவ கல்லூரி பெண் ஊழியரிடம் தங்க சங்கிலி பறிப்பு


மருத்துவ கல்லூரி பெண் ஊழியரிடம் தங்க சங்கிலி பறிப்பு
x

ஸ்கூட்டரில் சென்ற மருத்துவ கல்லூரி பெண் ஊழியரிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காரைக்கால்

ஸ்கூட்டரில் சென்ற மருத்துவ கல்லூரி பெண் ஊழியரிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மருத்துவ கல்லூரி ஊழியர்

காரைக்கால் நடுஓடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் செல்வஹேமாவதி (வயது 41). இவர் காரைக்கால் தனியார் மருத்துவ கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று மாலை வேலைக்கு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். காரைக்கால் பாரதியார் நகர் அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென செல்வ ஹேமாவதி கழுத்தில் அணிந்திருந்த தங்கசங்கிலியை பறிக்க முயன்றனர்.

2 பேருக்கு வலைவீச்சு

சுதாரித்து கொண்ட அவர் தங்கசங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இருப்பினும் மர்மநபர்கள் பாதி சங்கிலியை அறுத்து கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து காரைக்கால் நகர போலீசில் ஹேமாவதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கசங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பறிபோன தங்கநகையின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


Next Story