அரசுப்பள்ளி ஆசிரியை தற்கொலை


அரசுப்பள்ளி ஆசிரியை தற்கொலை
x

புதுவை அய்யங்குட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை சகோதரர் பேசாத காரணத்தினால் மனஅழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார்

புதுச்சேரி

புதுவை அய்யங்குட்டிப்பாளையம் திருவரங்கம் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 38). இவரது மனைவி ஆனந்தி (வயது 37). இவர் சுத்துகேணி அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் ஆனந்திக்கும், அவரது தம்பி அருண்ராஜிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் கடந்த சில ஆண்டுகள் பேசிக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆனந்தி மனஅழுத்தத்தில் இருந்தார். இதற்காக அவர் கடந்த சில மாதங்களாக டாக்டரின் ஆலோசனையின்பேரில் மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் இன்று ஆனந்தி, தனது வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story