வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x

புதுவையில் ஐகோர்ட்டுகளில் அந்தந்த மாநில மொழிகளை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று வக்கீல்கள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

ஐகோர்ட்டுகளில் அந்தந்த மாநில மொழிகளை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று வக்கீல்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் சென்னை ஐகோர்ட்டிலும் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று தமிழகம், புதுச்சேரி வக்கீல்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுவை கோர்ட்டு முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story