மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண் மாயம்


மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண் மாயம்
x

பாகூர் அடுத்த குருவிநத்ததில் மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண்ணை காணவில்லை.

பாகூர்

பாகூர் அடுத்த குருவிநத்தம் வானக்காரன் வீதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது27). இவருக்கும், செஞ்சியை சேர்ந்த விஜய் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்தநிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஜெயலட்சுமி கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டுக்கு வந்துவிட்டார். சம்பவத்தன்று வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டுச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story