நிபா வைரஸ் குறித்து பயப்பட தேவையில்லை
புதுச்சேரியில் நிபா வைரஸ் குறித்து மக்கள் பயப்பட தேவையில்லை என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி
கேரள மாநிலத்தில் 2 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தனர். அவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து புதுவையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, 'நிபா வைரஸ் பாதிப்பு குறித்து யாரும் பயப்பட தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு தற்போது கொரோனா பாதிப்பு போன்ற கட்டுப்பாடுகள் தேவையில்லை'என்றார்.
Related Tags :
Next Story