பிளஸ்-1 மாணவி கடத்தல்?


பிளஸ்-1 மாணவி கடத்தல்?
x

முதலியார்பேட்டை அவ்வைநகர் உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்த மாணவி பள்ளிக்கு சென்ற நிலையில் திரும்பி வராத காரணத்தினால், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகன்றனர்.

திருபுவனை

முதலியார்பேட்டை அவ்வைநகர் உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பூபாலன். அவரது மனைவி விஜயா. இவர்களது மகள் சுபலட்சுமி (வயது 17) திருபுவனை அருகே தமிழக பகுதியான வி.மாத்தூர் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்து பி.எஸ்.பாளையம் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி, பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story