நடைபாதை கடைகளை அகற்ற போலீசார் உத்தரவு
ஜனாதிபதி புதுவைக்கு வருவதை முன்னிட்டு 2 நாட்கள் நடைபாதையில் கடைகள் வைக்கக்கூடாது என்று போலீசார் உத்தரவிட்டனர்.
புதுச்சேரி
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக வருகிற 7-ந் தேதி புதுச்சேரி வருகிறார். விமான நிலையத்தில் இருந்து அவர் நேராக ஜிப்மர் வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதனை தொடர்ந்து புதுவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
புதுச்சேரி வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ஜெய்சங்கர் மற்றும் போலீசார் இன்று மாலை ஜிப்மர் மருத்துவமனை நுழைவாயிலில் இருந்து ஏர்போர்ட் சாலை வரை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள நடைபாதை கடை உரிமையாளர்களிடம், வருகிற 7, 8-ந் தேதிகளில் ஜனாதிபதி புதுவைக்கு வருவதை முன்னிட்டு அந்த 2 நாட்களும் நடைபாதையில் கடைகள் வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story