ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை


ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை
x

புதுவை ரெட்டியார்பாளையம் பகுதிகளில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்

புதுச்சேரி

புதுவை ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் உத்தரவின் பேரில் போலீசார் ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஊருக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட நபர்கள் யாரும் தங்கியுள்ளனரா? ஆயுதங்கள் எதுவும் பதுக்கி வைத்துள்ளார்களா? என சோதனை நடத்தினர். போலீசாரின் இந்த திடீர் சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story