2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்


2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்
x

வில்லியனூர் அருகே பள்ளி நிறுவனரை கைது செய்யக்கோரி 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

வில்லியனூர்

வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் பகுதியில் ஜெயபால கோகுலம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி பிளஸ்-2 மாணவிக்கு, பாலியல் ரீதியாக பள்ளி நிறுவனர் குமரன் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார், பள்ளி நிர்வாகி குமரன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி நிறுவனரை கைது செய்யக்கோரி பள்ளி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர்.

இந்தநிலையில் இன்று 2-வது நாளாக மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி நிறுவனரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story