ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை


ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை
x

புதுவையில் சட்ட ஓழுங்கு பணிகளுக்காக ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

புதுச்சேரி

புதுவையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுவேதா சிங் தலைமையில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் நேற்று இரவு வாணரப்பேட்டை பகுதிகளில் தெரு, தெருவாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ரவுடிகள் வீடுகளில் சோதனை நடத்தினர்.ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். மேலும் ஆயுதங்கள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர். பொதுமக்களிடம் தடை செய்யப்பட்ட ரவுடிகள் ஊருக்குள் நுழைந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தங்கள் பகுதிகளில் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர்.


Next Story