740 லிட்டர் சாராயம் பறிமுதல்


740 லிட்டர் சாராயம் பறிமுதல்
x

திருபுவனை அருகே கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 740 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருபுவனை

திருபுவனை அருகே கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 740 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சாராயம் பதுக்கல்

திருபுவனை அருகே உள்ள ஆண்டியார் பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது கரும்பு தோட்டத்தின் நடுவே 7 பிளாஸ்டிக் கேன்களில் 740 லிட்டர் சாராயம் மற்றும் 4 பாலித்தீன் பைகளில் 20 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 பேருக்கு வலைவீச்சு

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சாராயத்தை பதுக்கி வைத்தது ஆண்டியார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அண்ணாத்துரை (வயது47), சரவணன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தின் மதிப்பு ரூ.53 ஆயிரம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story