தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை


தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
x

காரைக்காலை அடுத்த நிரவியில் தாய் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நிரவி

காரைக்காலை அடுத்த நிரவி நாகதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ஸ்ரீமதி (வயது18), மோனிகா (8) ஆகிய மகள்கள் இருந்தனர்.

கோவையில் தங்கி இருந்து பாலமுருகன் வேலை செய்து வருகிறார். மீனாட்சி மயிலாடுதுறையில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று காலை சமையலின் போது பீட்ரூட் பொரியலை டி.வி. பார்க்கும் ஆர்வத்தில் ஸ்ரீமதி கருக விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அவரை கண்டித்து விட்டு மீனாட்சி வேலைக்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு மீனாட்சி திரும்பினார். அப்போது வீட்டுக்குள் மகள் ஸ்ரீமதி தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து ஸ்ரீமதியை தூக்கில் இருந்து இறக்கி, நிரவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிேசாதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஸ்ரீமதி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சமையல் செய்த போது பொரியலை கருக விட்டதை தாய் கண்டித்ததற்காக மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story