லாரி மோதி வாலிபர் சாவு


லாரி மோதி வாலிபர் சாவு
x

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழந்தார். சிறுமி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

காரைக்கால்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழந்தார். சிறுமி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

லாரி மோதியது

காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் மேலையூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சிவசங்கரன் (வயது 21). இவர் தனது தாய் ஜெயா (50), உறவினர் மகள் லோகேஸ்வரி (12) ஆகியோருடன் நேற்று பிற்பகல் 3 மணியளவில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள சகோதரி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

காரைக்காலை அடுத்த நெடுங்காடு மெயின் ரோட்டில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதியது. இதில் சிவசங்கரன் உள்பட 3 பேரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

உடனே அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிவசங்கரன் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். ஜெயா, லோகேஸ்வரி ஆகியோர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story