குடிசை வீடு எரிந்து நாசம் குடிசை வீடு எரிந்து நாசம்
கிருமாம்பாக்கம் பேட் பிள்ளையார் கோவில் வீதியில் குடிசை வீடு எரிந்து நாசமாகியது.
பாகூர்
ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் பேட் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 37). அவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் இன்று விநாயகமூர்த்தி குடிசை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றனர். அப்போது திடீரென வீட்டில் தீப்பிடித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாகூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பக்கிரி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story