பெண் மயங்கி விழுந்து சாவு


பெண் மயங்கி விழுந்து சாவு
x

புதுச்சேரியில் பெண் பெண் மயங்கி விழுந்து சாவு இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி

லாஸ்பேட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் திலகவதி (வயது 46). இவர் கணவரை பிரிந்து, அவரது மகன் சூரியநாராயணனுடன் வசித்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த திலகவதி திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே திலகவதி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story