புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

அரியாங்குப்பத்தில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் சீனிவாஸ் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 49). இவர் அங்குள்ள மார்க்கெட் வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் போலீசார் அவரது கடையில் சோதனை செய்தனர். அப்போது கடையில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் செல்வத்தையும் கைது செய்தனர்.


Next Story