கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

புதுவை கடற்கரையில் வார விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

புதுச்சேரி

வார விடுமுறையையொட்டி புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

சுற்றுலா தலமான புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதன்படி இன்று புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதன்காரணமாக ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பின.

சுற்றுலா பயணிகள் வருகை எதிரொலியாக புதுவை கடற்கரை, பாரதிபூங்கா, தாவரவியல் பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச், சின்ன வீராம்பட்டினம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் களைகட்டியது. கடற்கரை சாலை, பாண்டி மெரினா பீச்சில் பொதுமக்கள் கடலில் இறங்கி விளையாடினர். ஓட்டகம், குதிரை சவாரி செய்யவும் ஆர்வம் காட்டினர்.

போக்குவரத்து நெரிசல்

ஒயிட் டவுண் பகுதிகளில் உள்ள அழகான கட்டிடங்கள் மற்றும் அவற்றின் முன்பு வரைந்துள்ள ஓவியங்களின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

புதுச்சேரி நகர பகுதியில் ஏராளமான வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் உலா வந்தன. நகரின் முக்கிய வீதிகளான ஒய்ட் டவுன் பகுதி, அண்ணாசாலை, புஸ்சி வீதி, கடலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புதுச்சேரியில் சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் சுற்றுலா பயணிகள், பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.


Next Story