அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள்


அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள்
x

புதுவையில் இரு வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து போலீசார வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி

புதுச்சேரி உருளையன்பேட்டை பள்ளிவாசல் தெருவில் 55 வயது மதித்தக்க நபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் உருளையன்பேட்டை போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உருளையன்பேட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுவை சட்டசபை அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரி அருகே 55 வயது மதிக்கத்தக்க நபர் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்த பெரியகடை போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story