ஏனாமில் வைத்திலிங்கம் எம்.பி. அதிகாரிகளுடன் ஆலோசனை


ஏனாமில் வைத்திலிங்கம் எம்.பி. அதிகாரிகளுடன் ஆலோசனை
x

புதுவை எம்.பி. வைத்திலிங்கம் ஏனாமில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி

புதுவை எம்.பி. வைத்திலிங்கம், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் ஏனாம் சென்றுள்ளனர். அங்கு வைத்திலிங்கம். எம்.பி. அரசின் திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணித்து சிறப்பாக செயல்பட வைப்பதற்காக மாவட்ட அளவிலான கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக், வைத்தியநாதன் மற்றும் ஏனாம் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது அவர்கள் அதிகாரிகளுடன் அரசு திட்

டங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர். மேலும் செம்மையாகவும், விரைவாகவும், ஏனாம் பிராந்திய மக்கள் பயன்பெறும் வகையிலும் அரசின் திட்டங்களை செய்யும்படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். பின்னர் மெட்டசூர் கிராமத்தில் சாலை சீரமைப்பு பணியையும், சாவித்திரி நகரில் தகனமேடை அமைக்கும் பணியையும் வைத்திலிங்கம் எம்.பி. தொடங்கி வைத்தார்.

முன்னதாக ஏனாமில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு வைத்திலிங்கம் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Next Story