கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

காரைக்காலை அடுத்த திறுநள்ளாறு பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், காரைக்கால்மேடு சுனாமி நகரை சேர்ந்த நறுமுகன் (வயது 20) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story