கேரள சினிமா விருதுக்கான தேர்வு குழு தலைவராக தமிழ் நடிகை நியமனம்...!
மலையாளத்தில் வெளியாகும் சிறந்த சினிமாக்களுக்கு வருடந்தோறும் கேரள அரசு விருதுகளை வழங்கி வருகிறது.
மலையாளத்தில் வெளியாகும் சிறந்த சினிமாக்களுக்கு வருடந்தோறும் கேரள அரசு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான சிறந்த படங்களை தேர்வு செய்வதற்காக கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக பிரபல நடிகை சுகாசினி நியமிக்கப்பட்டு உள்ளார்.
கேரள அரசின் சினிமா விருதுகள் தேர்வு கமிட்டியில் உறுப்பினர்களாக இதற்கு முன்பு நடிகைகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விருது கமிட்டி தலைவராக ஒரு நடிகை நியமிக்கப்பட்டு உள்ளது இதுவே முதல் முறை ஆகும். கடந்த ஆண்டு வெளியான படங்களில் 80 படங்கள் விருதுக்காக போட்டியிடுகின்றன. இந்த படங்களை விருது கமிட்டி பார்த்து சிறந்த படங்களை தேர்வு செய்யும். இந்த கமிட்டியில் நடிகை சுகாசினியை தவிர பிரபல கன்னட இயக்குனர் சேஷாத்திரி, மலையாள இயக்குனர் பத்ரன், ஒளிப்பதிவாளர் முரளீதரன், இசை அமைப்பாளர் மோகன்சித்தாரா, ஒலி வடிவமைப்பாளர் ஹரிகுமார், திரைக்கதையாசிரியர் சசிதரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கேரள அரசின் சினிமா விருதுகள் தேர்வு கமிட்டியில் உறுப்பினர்களாக இதற்கு முன்பு நடிகைகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விருது கமிட்டி தலைவராக ஒரு நடிகை நியமிக்கப்பட்டு உள்ளது இதுவே முதல் முறை ஆகும். கடந்த ஆண்டு வெளியான படங்களில் 80 படங்கள் விருதுக்காக போட்டியிடுகின்றன. இந்த படங்களை விருது கமிட்டி பார்த்து சிறந்த படங்களை தேர்வு செய்யும். இந்த கமிட்டியில் நடிகை சுகாசினியை தவிர பிரபல கன்னட இயக்குனர் சேஷாத்திரி, மலையாள இயக்குனர் பத்ரன், ஒளிப்பதிவாளர் முரளீதரன், இசை அமைப்பாளர் மோகன்சித்தாரா, ஒலி வடிவமைப்பாளர் ஹரிகுமார், திரைக்கதையாசிரியர் சசிதரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story