மீண்டும் வலைத்தளம் பக்கம் வந்த சமந்தா


மீண்டும் வலைத்தளம் பக்கம் வந்த சமந்தா
x

நீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தா மீண்டும் வலைத்தளம் பக்கம் வந்து இருக்கிறார்.

சமந்தா விவாகரத்துக்கு பிறகு தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியான அவதூறு கருத்துகளால் கடுப்பாகி கோர்ட்டு வரை சென்றார். பிறகு அமைதியாகி விட்டார். கோவில்கள், இமயமலை, தியானம், சுற்றுப்பயணம் என்றெல்லாம் நேரத்தை செலவிட்டார். பேட்டி அளிப்பதை தவிர்த்தார். சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களையும், கருத்துகளையும் பகிர்ந்து வந்தவர் அதையும் நிறுத்தினார். கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளம் பக்கம் அவர் தலைகாட்டவே இல்லை. சமீபத்தில் சமந்தாவுக்கு சருமத்தில் பாதிப்பு உள்ளதாகவும், இதற்காக வெளிநாடு சென்று சிகிச்சை பெற இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதனை சமந்தாவின் உதவியாளர் மறுத்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தா மீண்டும் வலைத்தளம் பக்கம் வந்து இருக்கிறார். 'நீங்கள் எப்போதும் தனியாக செல்ல முடியாது' என்ற ஆங்கில வாசகம் கொண்ட டி-ஷர்ட் ஒன்றை அணிந்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இது உங்களுக்குத்தான் என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் சம்ந்தாவை மீண்டும் சமூக வலைத்தளத்துக்கு வரவேற்பதாக பதிவுகள் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Next Story