5வது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


5வது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
x
தினத்தந்தி 13 March 2019 4:04 PM GMT (Updated: 14 March 2019 12:29 AM GMT)

இந்தியாவுக்கு எதிரான 5வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில் ஐதராபாத், நாக்பூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், ராஞ்சி, மொகாலியில் நடந்த அடுத்த இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது.

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான கவாஜா 100 (106), பின்ச் 27 (43) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  இதன்பின் ஹேண்ட்ஸ்கோம்ப் அரை சதத்துடனும் (52 ரன்கள்), மேக்ஸ்வெல் ஒரு ரன்னுடனும், ஸ்டாய்னிஸ் (20), டர்னர் (20), கேரி (3) ரிச்சர்ட்சன் (29) மற்றும் கும்மின்ஸ் (15) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

லையான் (1 ரன்) ஆட்டமிழக்கவில்லை.  50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்திருந்தது.  இதனால் இந்திய அணிக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்பின் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் அரை சதம் அடித்து (56 ரன்கள்) வெளியேறினார்.  அவருடன் விளையாடிய தவான் (12) ரன்களிலும், கேப்டன் கோலி (20), ரிஷப் பான்ட் (16), விஜய் சங்கர் (16), ஜாதவ் (44), ரவீந்திர ஜடேஜா (0), குமார் (46), ஷமி (3) மற்றும் குல்தீப் யாதவ் (9) ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.  பும்ரா (1) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் எடுத்துள்ளது.  இதனால் ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.  இந்தியாவில் நடந்த ஒரு நாள் போட்டி தொடரில், கடந்த 2009ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வென்றுள்ளது.

Next Story