ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
x
தினத்தந்தி 16 April 2019 6:22 PM GMT (Updated: 16 April 2019 6:22 PM GMT)

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

மொகாலி, 

மொகாலியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 32-வது லீக் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்தது, பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 52 (47) ரன்கள், டேவிட் மில்லர் 40 (27) ரன்கள், கிறிஸ் கெய்ல் 30 (22) ரன்கள் எடுத்தனர். 

ராஜஸ்தான் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட் மற்றும் இஷ் சோதி, ஜெய்தேவ் உனட்கட், தவால் குல்கர்னி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 50 (45) ரன்கள், ஸ்டூவர்ட் பின்னி 33 (11) ரன்கள், சஞ்சு சாம்சன் 27 (21) ரன்கள், ரஹானே 26 (21)  ரன்கள், எடுத்தனர்.

பஞ்சாப் அணியில் ஆர்.அஸ்வின் , அர்ஷ்தீப் சிங் , முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் மற்றும் முருகன் அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர்.



Next Story