ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்கள் இலக்கு
![ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்கள் இலக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்கள் இலக்கு](https://img.dailythanthi.com/Articles/2019/Apr/201904201804512139_IPL-cricket-competition-Rajasthan-team-a-target-of-162-runs_SECVPF.gif)
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்,
ஜெய்ப்பூரில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 36-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் ராஜஸ்தான் அணியில், அஜிங்கியா ரஹானேவுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுகிறார்.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்துள்ளது.
மும்பை அணியில் அதிகபட்சமாக குவின்டன் டி காக் 65 (47) ரன்கள், சூர்யகுமார் யாதவ் 34 (33) ரன்கள், ஹர்திக் பாண்டியா 23 (15) ரன்கள் எடுத்தனர்.
ராஜஸ்தான் அணியில் ஸ்ரேயாஸ் கோபால் 2 விக்கெட், ஸ்டூவர்ட் பின்னி, ஜெய்தேவ் உனட்கட் , ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து ராஜஸ்தான் அணி 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.
Related Tags :
Next Story