திருமண ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு வலைவீச்சு
![திருமண ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு வலைவீச்சு திருமண ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு வலைவீச்சு](https://img.dailythanthi.com/Images/Article/201701052339477384_Wedding-saying-acaivarttaiRaping-young-womanThe-Hunt-for_SECVPF.gif)
தேனி மாவட்டம் சின்னமனூர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கம். இவருடைய மகன் சின்னா என்ற சின்னப்பையன் (வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள வாழைக்காய் குடோனில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் 19 வயது இளம்பெண்ணும் வேலை பார்த்து வருகிறார். இரண்டு ப
போடி,
தேனி மாவட்டம் சின்னமனூர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கம். இவருடைய மகன் சின்னா என்ற சின்னப்பையன் (வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள வாழைக்காய் குடோனில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் 19 வயது இளம்பெண்ணும் வேலை பார்த்து வருகிறார். இரண்டு பேரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமண ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை சின்னா கற்பழித்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த பெண் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு சின்னா சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போடியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து சின்னாவை தேடி வருகிறார்கள்.
Next Story