மேலூர் அருகே விபத்து: மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; தாத்தா– பேரன் பலி
![மேலூர் அருகே விபத்து: மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; தாத்தா– பேரன் பலி மேலூர் அருகே விபத்து: மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; தாத்தா– பேரன் பலி](https://img.dailythanthi.com/Images/Article/201704070015124317_Melur-near-the-accident-motorcycle-collision-on-the-bus_SECVPF.gif)
மேலூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் தாத்தா, பேரன் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மேலூர்
மேலூர் அருகே உள்ள சொற்குளிப்பட்டியைச் சேர்ந்தவர் அழகன்.
இவரது மகன் பாலமுருகன் (வயது 17). பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்து விட்டு விடுமுறையில் இருந்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று காலை திருவாதவூரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் அங்கிருந்த தனது தாத்தா பாக்கியத்தை (65) மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு மீண்டும் சொற்குளிப்பட்டிக்கு பால முருகன் வந்து கொண்டிருந்தார்.
விபத்து
இடையபட்டியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு டவுன் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பாலமுருகனும், அவரது தாத்தா பாக்கியமும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர் அருகே உள்ள சொற்குளிப்பட்டியைச் சேர்ந்தவர் அழகன்.
இவரது மகன் பாலமுருகன் (வயது 17). பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்து விட்டு விடுமுறையில் இருந்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று காலை திருவாதவூரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் அங்கிருந்த தனது தாத்தா பாக்கியத்தை (65) மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு மீண்டும் சொற்குளிப்பட்டிக்கு பால முருகன் வந்து கொண்டிருந்தார்.
விபத்து
இடையபட்டியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு டவுன் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பாலமுருகனும், அவரது தாத்தா பாக்கியமும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story