தூத்துக்குடி மாவட்டத்தில், நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் ஊர்கள்


தூத்துக்குடி மாவட்டத்தில், நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் ஊர்கள்
x
தினத்தந்தி 21 Jun 2017 10:15 PM GMT (Updated: 21 Jun 2017 3:14 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் ஊர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் ஊர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

அம்மா திட்ட முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள அம்மா திட்ட முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடந்து வருகிறது.

அதன்படி இந்த வாரத்துக்கான முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முகாம் தூத்துக்குடி தாலுகாவில் முள்ளக்காடு பகுதி–2 கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா நாணல்காடு கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகா காலான்குடியிருப்பிலும், சாத்தான்குளம் தாலுகா படுக்கப்பத்து கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகா இளையரசனேந்தல் கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகா பூதலாபுரத்திலும், எட்டயபுரம் தாலுகா மேலக்கரந்தையிலும், ஓட்டப்பிடாரம் தாலுகா பட்டிணமருதூரிலும், கயத்தார் தாலுகா காப்புலிங்கம்பட்டியிலும் நடக்கிறது.

கோரிக்கை மனு

இந்த முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு – இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்பட உள்ளன. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம், என கலெக்டர் தெரிவித்து உள்ளார்.


Next Story