ரே‌ஷன் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம்


ரே‌ஷன் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 21 Jun 2017 10:00 PM GMT (Updated: 21 Jun 2017 7:49 PM GMT)

ரே‌ஷன் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

அரியலூர்,

அரியலூர் மண்டல இணைப்பதிவாளர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

அரியலூர் மாவட்டத்தில் 442 பொதுவினியோகத்திட்ட ரே‌ஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதன் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய பொருட்கள் முறையாக வினியோகிக்கப்படுகிறதா என்று இணைப்பதிவாளர், முதுநிலை ஆய்வாளர்கள் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் ரே‌ஷன் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது அத்தியாவசிய பொருட்கள் போலி ரசீது மூலமாக கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. அதன்படி ரூ.27 ஆயிரத்து 315 மதிப்பிலான பொருட்களை கூடுதலாக ரூ.1,100 சேர்த்து ரூ.28 ஆயிரத்து 415–க்கு விற்றது தெரியவந்தது. இதில் வீராக்கன்னில் உள்ள ரே‌ஷன் கடை விற்பனையாளர் அண்ணாத்துரை மற்றும் இலையூர் ரே‌ஷன் கடை விற்பனையாளர் செல்வம் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பணியிடை நீக்கம் செய்து மண்டல இணைப்பதிவாளர் தயாளன் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story