அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; மெக்கானிக் பலி


அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; மெக்கானிக் பலி
x
தினத்தந்தி 23 July 2017 10:45 PM GMT (Updated: 23 July 2017 8:55 PM GMT)

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கோமல் கீழத்தெருவை சேர்ந்தவர் அருள்பிரகாசம். இவருடைய மகன் வெங்கடேசன் (வயது 27). இவர் முத்துப்பேட்டையில் உள்ள தனியார் மோட்டார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் கோமலுக்கு சென்று கெண்டிருந்தார். அப்போது ஆலத்தம்பாடி அருகே உள்ள கரும்பியூர் என்ற இடத்தில் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஆலிவலம் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

Related Tags :
Next Story