ஏரியூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு கனிமவள நிறுவன ஊழியர் பலி
![ஏரியூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு கனிமவள நிறுவன ஊழியர் பலி ஏரியூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு கனிமவள நிறுவன ஊழியர் பலி](https://img.dailythanthi.com/Images/Article/201710290011537995_Dengue-fever-killed-mineral-corporation-employee_SECVPF.gif)
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள சின்ன வத்தலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45).
ஏரியூர்,
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள சின்ன வத்தலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). இவர் தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் ஏரியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்த போது டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனால் ராஜேந்திரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். டெங்கு காய்ச்சலுக்கு கனிமவள நிறுவனத்தில் ஊழியர் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.