பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி இடைநீக்கம்
![பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி இடைநீக்கம் பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி இடைநீக்கம்](https://img.dailythanthi.com/Images/Article/201712300433370965_Training-girl-IAS-The-official-work-is-suspended_SECVPF.gif)
கன்னடத்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்ததாக எழுந்த புகாரை அடுத்து பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பெங்களூரு,
அப்போது மேடையில் முன்வரிசையில் நின்று இருந்த பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரீத்தி கெலாட் வாயில் சுவிங்கம் மென்றபடி இருந்தார். இந்த வீடியோ காட்சிகள் செய்தி தொலைக்காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் கன்னடத்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்துவிட்டதாக அவர் மீது புகார் எழுந்தது.
இந்த நிலையில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரீத்தி கெலாட்டை தலைமை செயலாளர் ரத்னபிரபா பணி இடைநீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார். மேலும் இதுபற்றி 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.Related Tags :
Next Story